close
Choose your channels

தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்!!!

Wednesday, March 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்!!!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல் நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப் பட்டு இருக்கின்றன. அந்த தனி வார்டுகளில் நீல நிற உடை அணிந்த ஒரு சில மருத்துவர்களைத் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப் படுவதில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் பொது மக்கள் தற்போது, தாங்களாகவே கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என பரிசோதனை செய்து கொள்ள முன்வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஒவ்வொரு மருத்துவ மனைகள் மற்றும் பொது இடங்களில் சுகாதாரத் துறை பணியாளர்களை கொண்டு கிருமிநாசினிகள் தெளிக்கப் படுகின்றன. இந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் முகமூடிகள் அணிந்த படி ஏணிப் படிக்கட்டுகள், பேருந்து கைப்பிடி, மருத்துவ மனைகளின் பொது இடங்கள் போன்ற பொது மக்கள் பயன்படுத்தும் முக்கிய இடங்களில் கிருமிநாசினிகளைத் தெளித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள அரசு மருத்துவ மனைகளின் நுழைவு வாயிலில், தடுப்புகள் அமைக்கப் பட்டு உள்ளே வருபவர்களை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையின் முதல் தளத்தில் கொரோனா வார்டு அமைக்கப் பட்டு இருக்கிறது. இந்த Isolation வார்டுக்குள் மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என்று 30 பேர் தாங்களாகவே மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுகாதார பணியாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப் பட வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக பணியாற்றும்போது மக்களுக்கு கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும் என்று பொது மக்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு இருக்கிறது. மக்கள் கூடும் பெரும்பாலான இடங்கள் மூடப் பட்டு இருக்கிறது. திரையரங்குகள், மால்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படவும் உத்தரவிடப் பட்டு இருக்கிறது. பேருந்துகள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் கிருமிநாசினி பொருட்களை சுகாதாரத் துறை பணியாளர்கள் தெளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பலர் வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டும் வருகின்றனர். மேலும், 28 பேர் மருத்துவமனைகளில் தொடர் கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.