close
Choose your channels

நடிகை தமன்னாவுக்கு சைபர்செல் போலீசார் அனுப்பிய சம்மன்.. ஐபிஎல் விவகாரமா?

Thursday, April 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் போட்டிகளை செயலியில் ஒளிபரப்புவது குறித்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகை தமன்னாவுக்கு சைபர் செல் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகை தமன்னா உள்பட ஒரு சில பாலிவுட் பிரபலங்கள் ஃபேர்பிளே என்ற செயலி மூலம் ஐபிஎல் போட்டிகளை பாருங்கள் என்று விளம்பரம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஃபேர்பிளே என்ற செயலியில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பாவதால் ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை வைத்திருக்கும் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் நடிகை தமன்னா ஏப்ரல் 29ஆம் தேதி சைபர்செல் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதே விவகாரத்தில் ஏற்கனவே பாப் பாடகர் பாட்ஷா, நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.