சமந்தா குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு: அதிர்ச்சி தகவல் 

  • IndiaGlitz, [Thursday,September 19 2019]

பிரபல தெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹாபப்நகர் என்ற என்ற பகுதியில் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. சுமார் நாற்பது ஏக்கர் பரப்பளவுள்ள இந்த பண்ணை வீடு கடந்த சில வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த பண்ணை வீட்டை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அங்கு துர்நாற்றம் வருவதை கண்டனர். இதனையடுத்து அந்த பகுதியைச் சோதனை செய்து பார்த்தபோது அழுகிய நிலையில் ஒரு பிணம் எலும்புக்கூடாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தரப்பட்டது.

மோப்ப நாயுடன் வந்த காவலர்கள் மனித எலும்புக்கூட்டையும், மற்ற எலும்புகளையும் சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். கண்டெடுக்கப்பட்ட பிணம் அழுகிய நிலையில் சிதிலமடைந்து எலும்புக்கூடாக இருப்பதால் இந்த பிணம் குறித்த தகவல்களை கண்டுபிடிப்பது சிரமமான விஷயம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலையா? தற்கொலையா? ஆறு மாதங்களுக்கு முன் இந்த பண்ணை வீட்டில் என்ன நடந்தது? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

More News

என்ன நியாயமா விளையாடிறீங்க எல்லோரும்? கவின் ஆவேசம்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளில் இருந்து காதல், காதல் காதல் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற அளவில் விளையாடிக் கொண்டிருந்த கவின், தற்போது கடந்த 2 நாட்களாக போட்டியை வெல்ல வேண்டும்

தமிழிசைக்கு நேரில் வாழ்த்து கூறிய தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார்

சென்னையில் விடிய விடிய கனமழை: பள்ளிகள் இயங்குமா?

சென்னை மட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு

ஒரே கேரக்டரில் நடிக்கும் நயன்தாரா -உதயநிதி!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் 'நெற்றிக்கண்' என்ற படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

லாஸ்லியாவுக்காக சாண்டியுடன் மோதும் கவின்!

பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் கடந்த சில வாரங்களாக காதலர்களாக வலம் வருவதும் லாஸ்லியாவின் பெற்றோரின் வருகைக்குப் பின்னர் இருவரும் தங்கள் காதலை