நடிகருக்கு இணையா சம்பளம் கேட்ட பாலிவுட் நடிகை… கிடைத்த பதில் என்ன தெரியுமா?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் முன்னணி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய “பத்மாவதி“, “பாஜீராவ் மஜ்தானி“, “ராம்லீலா“ போன்ற படங்களில் நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து இருந்தார். கூடவே ஹாலிவுட் திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி தனது புதுப்படமான “பைஜு பாவ்ரா“ திரைப்படத்தின் வேலைகளை துவங்கிவிட்டார். இந்தப் படத்தில் கதாநாயகனாக மீண்டும் தனது ஆஸ்தான ஹீரோ ரன்வீர் சிங்கையே அவர் நடிக்க வைக்க உள்ளாராம். அவருக்கு ஜோடியாக ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோன் குறித்து பேச்சு அடிப்பட்டு இருக்கிறது. ஆனால் நடிகை தீபிகா கதாநாயகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்திற்கு இணையாக நடிகைகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து பாலிவுட் வட்டாரத்தில் ஏற்கனவே பலமுறை குரல் கொடுத்து இருக்கிறார்.

“பைஜு பாவ்ரா” விஷயத்திலும் இதே கொள்கையை நடிகை தீபிகா கடைப்பிடிக்க நினைத்தாராம். இதனால் இந்தப் படத்தில் இருந்து நடிகை தீபிகா கழட்டி விடப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்ற குரல் தற்போது வலுத்து வருகிறது.

ஏற்கனவே பல நடிகர்களின் சம்பளத்தைவிட அதிகச் சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா பாலிவுட்டில் முன்னணி இடத்தைப் பிடித்து இருக்கும் தன் கணவர் ரன்வீர் சிங்கிற்கு இணையாகச் சம்பளம் கேட்டதால்தான் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது என்றும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

More News

மெஸ்ஸியின் ஜெர்ஸியுடன் போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக கடந்த 21 ஆண்டுகளாக விளையாடிய நிலையில் சமீபத்தில் ஒப்பந்தம் பதிப்பிக்கப்படாததால் பார்சிலோனா அணியில்

தங்கம் வென்ற ஒரே நாளில் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்த ஆச்சரியம்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்ற கொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் நெருங்கி உள்ளது பெரும்

சென்னை ரெங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் தடை தொடர்கிறதா?

சென்னை ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் சென்னை மாநகராட்சித் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருவதை அடுத்து தடை மேலும் தொடருமா? அல்லது கடைகள் திறக்கப்படுமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம் 

தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா.....!சொகுசு கார் முதல் கோடிகளில் குவியும் ரொக்கம் வரை ...!

23 வயது நிரம்பிய நீரஜ்  சோப்ரா பங்குபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி இதுதான். டோக்கியோ-வில்

மாடலிங் செய்யும் 99 வயது பாட்டி? நெட்டிசன்ஸ் வியக்கும் அசத்தலான புகைப்படம்!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 99 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய பேத்தியின் பிசினஸ்க்காக மாடலிங் செய்ய துவங்கி இருக்கிறார்