close
Choose your channels

தங்கம் வென்ற ஒரே நாளில் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்த ஆச்சரியம்

Monday, August 9, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்ற கொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் நெருங்கி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் கிடைத்தது என்பதும் பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 48-வது இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தடகள போட்டியில் இந்தியாவுக்கு 100 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் மிக அபாரமாக விளையாடி தங்கப் பதக்கம் பெற்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், பரிசுகள் குவிந்து வருகிறது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் மூன்று மில்லியனை நெருங்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறுவதற்கு முன்னர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் என இருந்த பாலோயர்கள் எண்ணிக்கை, தங்கப்பதக்கம் பெற்ற ஒரே நாளில் 3 மில்லியனை நெருங்கி உள்ளது. மேலும் பல ஃபாலோயர்கள் அதிகரித்து வருவதை அடுத்து இன்னும் பல மில்லியன் ஃபாலோயர்கள் அவர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.