கோடான கோடி நன்றி: முன்னாள் மனைவி ஐஸ்வர்யா படம் குறித்து தனுஷின் நெகிழ்ச்சி பதிவு..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’3’. இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படத்தின் மூலம்தான் அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘ஒய் திஸ் கொலைவெறி’ உள்பட இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியது.
இந்த நிலையில் ’3’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு புது படங்களுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது பார்த்த தனுஷ் ஆனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார்.
’3 படத்தின் ரீ-ரிலீஸுக்கு கிடைக்கும் வரவேற்பு எமோஷனலாக உள்ளது. இந்த ஏகோபித்த வரவேற்புக்கு கோடான கோடி நன்றி’ என்று அவர் பதிவு செய்துள்ளார். தனுஷின் இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
இந்த படம் வெளியாகும் போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகளாக இருந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)