நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறதா தனுஷின் அடுத்த படம்?

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஓடிடியில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருந்த நிலையில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வசூலை குவித்தது. இதனையடுத்து பல திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் முதலில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டாலும் அதன் பின்னர் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஓடிடியில் இந்தத் திரைப்படம் வெளியாக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

தனுஷின் ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்களும் திரையரங்குகளுக்கு வர தொடங்கி உள்ள நிலையில் தனுஷின் ஜகமே தந்திரம் படக்குழுவினர் ஏன் ஓடிடி ரிலீஸ் முடிவை எடுத்தார்கள் என்பது புரியாத புதிராக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

கார்த்தியின் 'சுல்தான்' மாஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகிவரும் 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் உள்பட பெரும்பாலான போஸ்ட் புரடொக்சன்ஸ்

சிம்பு-நயன்தாராவை மீண்டும் இணைத்து வைக்க பிரபல இயக்குனர் முயற்சி?

சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து 'வல்லவன்' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் இருவரும்

பிரபல நடிகையை விவாகரத்து செய்யும் தனுஷ் பட ஒளிப்பதிவாளர்!

தனுஷ் பட ஒளிப்பதிவாளர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தை அணுகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரஜினியை திடீரென நேரில் சந்தித்த சிறுத்தை சிவா: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் திடீரென படக்குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

முதலில் முதல்வர்… அடுத்து மறைந்த பிரதமர்… பாலிவுட் நடிகையின் அசத்தும் புதிய அவதாரம்!

இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.