close
Choose your channels

சிம்பு-நயன்தாராவை மீண்டும் இணைத்து வைக்க பிரபல இயக்குனர் முயற்சி?

Saturday, January 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ’வல்லவன்’ மற்றும் ’இது நம்ம ஆளு’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு ’விண்ணை தாண்டி வருவாயா’ என்ற சூப்பர்ஹிட் படம் உருவாகியது. அதன் பின் 2016ஆம் ஆண்டு இதே கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கௌதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஏற்கனவே ’மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்த நயன்தாராவுக்கு நல்ல பெயர் கிடைத்தது என்பதால் அவரது தயாரிப்பில் மீண்டும் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொள்வார் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.