close
Choose your channels

ரஜினியை திடீரென நேரில் சந்தித்த சிறுத்தை சிவா: என்ன காரணம்?

Saturday, January 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் திடீரென படக்குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரஜினிக்கும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுத்து வருவதால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து ஆலோசனை செய்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்குனர் சிறுத்தை சிவா அவரது வீட்டில் சந்தித்து உள்ளார்

இந்த சந்திப்பில் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. எனவே விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.