என்னை தக்கவைக்க வேண்டாம்- தோனியின் பேச்சால் ஆடிப்போன ரசிகர்கள்!

அடுத்த ஐபிஎல் தொடருக்காக என்னை அதிகவிலை கொடுத்து தக்கவைக்க வேண்டாம் என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியிருப்பது தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐபிஎல் 14ஆவது சீசன் போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் புதிதிதாக 2 அணிகள் ஐபிஎல் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. எனவே ஐபிஎல் தொடருக்கான விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் துவங்கவுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ விதிமுறைப்படி ஒவ்வொரு அணிகளும் குறைந்த 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும். மற்ற வீரர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள்.

இந்த விதிமுறை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் பொருந்தக் கூடியதுதான். ஆனால் இந்தமுறை பிசிசிஐ வகுத்திருக்கும் விதிப்படி ஒரு அணி, 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அதன் முதன்மை வீரருக்கு ரூ.16 கோடி ஊதியத்தைக் கொடுக்க வேண்டும். அதேபோல 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அந்த அணி அதன் முதன்மை நபருக்கு 15 கோடி ஊதியம் கொடுக்க வேண்டும். அடுத்து ஒன்று அல்லது இரண்டு வீரர்களைத் தக்கவைக்கும் அணி முதன்மை வீரருக்கு ரூ.14 கோடி ஊதியம் கொடுக்க வேண்டும்.

இந்நிலையில் அதிகவிலை கொடுத்து என்னை சிஎஸ்கே அணி நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள வேண்டாம். அது சிஎஸ்கேவிற்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்று தல தோனி தெரிவித்து இருக்கிறார். காரணம் 40 வயதாகும் தோனி அடுத்த வருடம் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் “எம்.எஸ்.தோனி ஒரு நியாயமான மனிதர். அவர் எங்களிடம் அதிகதொகை கொடுத்து தன்னை தக்கவைக்க வேண்டாம். அது சிஎஸ்கேவுக்கு நஷ்டம்“ எனக்கூறினார். ஆனால் நாங்கள் அவரை விடபோவதில்லை. முன்பே கூறியபடி தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. அவர்தான் எங்களின் முதல் தேர்வு.

எனினும் அணியில் தோனியை போன்றே நீண்டகாலம் இருக்கும் வேறு வீரர்களுக்கு இதே சலுகையை கொடுக்க முடியாது. ஆலோசனைகளில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அவர்கள் மட்டும்தான் தக்கவைக்கப்படுவார்கள். கடினமான முடிவுகளை எடுத்துத்தான் ஆக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிஎஸ்கே அணியின் விளையாடிவரும் சின்ன தல சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே நிர்வாகம் கைவிட்டு விடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

More News

திருப்பதி கோவிலில் நடிகை ரோஜாவுடன் விஷால்: வைரல் புகைப்படம்!

விஷால், ஆர்யா நடித்த 'எனிமி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக இன்று விஷால் திருப்பதி ஏழுமலையான் கோவில்

தங்கக்கடத்தல், தீவிரவாதிகள், ஜார்ஜியாவில் கிளைமாக்ஸ்: 'பீஸ்ட்' குறித்த ஆச்சரியமான தகவல்கள்

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் முன்னணி ஊடகம் ஒன்றில் 'பீஸ்ட்' குறித்த முக்கியமான தகவல்கள் ஒருசில வெளிவந்து

ஆட்டம் போடும் நிரூப்பை அடுத்த வாரம் வச்சு செய்வாரா பாவனி?

பிக்பாஸ் வீட்டில் ஐந்து காயின்கள் ஐந்து போட்டியாளர்களிடம் இருக்கும் நிலையில்  ஒவ்வொரு வாரமும் ஒரு காயினுக்கு சக்தி வழங்கப்படும் நிலையில் அந்த காயின் வைத்திருப்பவர்கள். வீட்டில் உள்ள மற்ற

கெளதம் மேனனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: 'காக்க காக்க' அடுத்த பாகமா?

பிரபல இயக்குனர் கெளதம் மேனன் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் சூர்யா நடிப்பில் கெளதம் மேனன்

'அரண்மனை 3' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த திரைப்படம் கடந்த ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக