close
Choose your channels

கெளதம் மேனனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: 'காக்க காக்க' அடுத்த பாகமா?

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கெளதம் மேனன் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘காக்க காக்க’ படத்தின் அடுத்த பாகமா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் கெளதம் மேனன் நடிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்திற்கு ‘அன்பு செல்வன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கவுள்ளார். சிவா பத்மாயன் என்பவரது இசையில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியீட்டு இயக்குனர் கெளதம் மேனனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ’காக்க காக்க’ என்ற திரைப்படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயர் அன்புச்செல்வன் என்பதால் இந்த படம் ’காக்க காக்க’ படத்தின் அடுத்த பாகமா? என்று கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இருப்பினும் அது குறித்து எந்தவித அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படமும் ஒரு போலீஸ் கதை என்பது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.