மூன்றாவது முறையாக ஹரியுடன் இணையும் விக்ரம்?

  • IndiaGlitz, [Saturday,August 22 2015]

நடிகர் விக்ரம் தற்போது 10 எண்றதுக்குள்ள' படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இம்மாத இறுதியில் விக்ரம் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த சங்கரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் விக்ரம் மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் சாமி, அருள் ஆகிய இரண்டு படங்களில் ஏற்கனவே நடித்துள்ள விக்ரம் சமீபத்தில் இரண்டு முறை ஹரியை நேரில் சந்தித்து பேசியதாகவும், செய்திகள் வெளிவந்துள்ளது.


ஹரி தற்போது 'சிங்கம் 3' படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் பிசியாக உள்ளார். சூர்யா தனது '24' படத்தை முடித்துவிட்டு வந்தவுடன் சிங்கம் 3' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படம் 2016ஆம் ஆண்டில் முடிவடையும் என்றும் இந்த படம் முடிந்தவுடன் ஹரி, விக்ரமுடன் இணைவார் என்றும் அதற்குள் விக்ரம், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தை முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த 'சாமி' படம் மிகப்பெரிய ஹிட் ஆகியது. விக்ரம், த்ரிஷா மற்றும் விவேக் நடிப்பில் உருவான அந்த படம் போலீஸ் படங்களில் ஒரு வித்தியாசமான படமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் இருவரும் மீண்டும் இணைந்து உருவாக்கிய அருள்' அதிக வன்முறை காட்சிகள் காரணமாக தோல்வி அடைந்தது. ஹரி-விக்ரம் இணையவுள்ள திரைப்படம் 'சாமி' போன்று வித்தியாசமான திரைக்கதையுடன் அமையும் படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஷாலின் 'பாயும் புலி' சென்சார் விபரங்கள்

ஒருபக்கம் இளையதளபதியின் 'புலி' படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்...

ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையாக ஒப்பிடப்படும் 'புலி' ஸ்ரீதேவி?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி இணையதளங்களையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு..

பாகுபலி க்கு இணையாகுமா புலி? ஒரு ஒப்பீடு

இந்திய அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி, வசூலிலும் மிகப்பெரிய சாதனை செய்த படம் சமீபத்தில் வெளிவந்த எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி திரைப்படம். ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் உலகம் முழுவதும்...

சூர்யா அளவுக்கு என்னை விஜய் காயப்படுத்தவில்லை. கவுதம் மேனன்

'என்னை அறிந்தால்' படத்தை அடுத்து கவுதம் மேனன் தற்போது 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தை இயக்கி வருகிறார்...

தனுஷ் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் வெளியேற்றமா?

ஏ.எல்.விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் மளமளவென புதிய படங்களில் புக் ஆனார். சிவகார்த்திகேயனுடன் ரஜினி ...