close
Choose your channels

மூன்றாவது முறையாக ஹரியுடன் இணையும் விக்ரம்?

Saturday, August 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விக்ரம் தற்போது 10 எண்றதுக்குள்ள' படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இம்மாத இறுதியில் விக்ரம் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த சங்கரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் விக்ரம் மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் சாமி, அருள் ஆகிய இரண்டு படங்களில் ஏற்கனவே நடித்துள்ள விக்ரம் சமீபத்தில் இரண்டு முறை ஹரியை நேரில் சந்தித்து பேசியதாகவும், செய்திகள் வெளிவந்துள்ளது.


ஹரி தற்போது 'சிங்கம் 3' படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் பிசியாக உள்ளார். சூர்யா தனது '24' படத்தை முடித்துவிட்டு வந்தவுடன் சிங்கம் 3' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படம் 2016ஆம் ஆண்டில் முடிவடையும் என்றும் இந்த படம் முடிந்தவுடன் ஹரி, விக்ரமுடன் இணைவார் என்றும் அதற்குள் விக்ரம், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தை முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த 'சாமி' படம் மிகப்பெரிய ஹிட் ஆகியது. விக்ரம், த்ரிஷா மற்றும் விவேக் நடிப்பில் உருவான அந்த படம் போலீஸ் படங்களில் ஒரு வித்தியாசமான படமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் இருவரும் மீண்டும் இணைந்து உருவாக்கிய அருள்' அதிக வன்முறை காட்சிகள் காரணமாக தோல்வி அடைந்தது. ஹரி-விக்ரம் இணையவுள்ள திரைப்படம் 'சாமி' போன்று வித்தியாசமான திரைக்கதையுடன் அமையும் படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.