என் அடுத்த பட ஹீரோவுக்கு கை உடைந்ததால் மகனை ஹீரோவாக்கினேன்: இயக்குனர் முத்தையா

  • IndiaGlitz, [Saturday,February 24 2024]

பிரபல இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா ஹீரோவாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் மகனை ஹீரோவாகியது ஏன் என்பது குறித்து சமீபத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

‘குட்டிப்புலி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான முத்தையா ’கொம்பன்’ ’மருது’ ’கொடிவீரன்’ ’தேவராட்டம்’ ’புலிக்குட்டி பாண்டி’ ’விருமன்’ ’காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது தெரிந்தது.

கிராமத்து கதை அம்சத்தில் அதிரடி ஆக்சன் படங்களாக இயக்கி வரும் முத்தையா ’காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தை இயக்கி முடித்தவுடன் பிரபல நடிகருடன் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் திடீரென மகன் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போவதாக அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இயக்குனர் முத்தையா கூறிய போது ’என்னுடைய அடுத்த பட ஹீரோவுக்கு திடீரென கையில் காயம் ஏற்பட்டிருந்தால் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் அவருக்கு கை சரியாகும் இடைவெளியில் ஒரு படத்தை முடித்து விடலாம் என்று தான் என் மகன் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். இந்த படத்தின் கதை பள்ளி பருவ காதல் மற்றும் அதன் பின்னணியில் நடப்பது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது மதுரை அருகே படப்பிடிப்பு நடந்து வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து முத்தையா இயக்கத்தில் நடிக்க இருந்த அந்த கையில் காயம்பட்ட ஹீரோ யார் என்பதை ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

More News

வெங்கடேஷ் பட்-ஐ தொடர்ந்து இன்னொரு பிரபலமும் விலகல்.. என்ன நடக்குது குக் வித் கோமாளியில்?

விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாகவும் இந்த சீசனுக்கான

4 லொகேஷன் ரெடி.. 'சூர்யா 43' படப்பிடிப்பு எப்போது? கசிந்த தகவல்..!

நடிகர் சூர்யா நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நான்கு இடங்களில் நடைபெற இருப்பதாகவும்

த்ரிஷா விவகாரத்தில் 2வது முறையாக புகார் அளித்த கருணாஸ்.. இந்த முறை யார் மீது?

நடிகர் கருணாஸ் ஏற்கனவே தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜூ மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளதாக தகவல்

திருமணம் செய்ய மறுத்த டிவி ஆங்கரை கடத்திய பெண் தொழிலதிபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

தொலைக்காட்சியில் பணிபுரியும் ஆங்கரை பெண் தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்வதற்காக கடத்தியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் ரம்யா பாண்டியன் ஸ்டைல்.. செம்ம போட்டோஷூட் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் ஸ்டைலான போட்டோஷூட் புகைப்படங்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து 'இதுதான் ரம்யா பாண்டியன்