close
Choose your channels

என் அடுத்த பட ஹீரோவுக்கு கை உடைந்ததால் மகனை ஹீரோவாக்கினேன்: இயக்குனர் முத்தையா

Saturday, February 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா ஹீரோவாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் மகனை ஹீரோவாகியது ஏன் என்பது குறித்து சமீபத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

‘குட்டிப்புலி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான முத்தையா ’கொம்பன்’ ’மருது’ ’கொடிவீரன்’ ’தேவராட்டம்’ ’புலிக்குட்டி பாண்டி’ ’விருமன்’ ’காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது தெரிந்தது.

கிராமத்து கதை அம்சத்தில் அதிரடி ஆக்சன் படங்களாக இயக்கி வரும் முத்தையா ’காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தை இயக்கி முடித்தவுடன் பிரபல நடிகருடன் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் திடீரென மகன் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போவதாக அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இயக்குனர் முத்தையா கூறிய போது ’என்னுடைய அடுத்த பட ஹீரோவுக்கு திடீரென கையில் காயம் ஏற்பட்டிருந்தால் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் அவருக்கு கை சரியாகும் இடைவெளியில் ஒரு படத்தை முடித்து விடலாம் என்று தான் என் மகன் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். இந்த படத்தின் கதை பள்ளி பருவ காதல் மற்றும் அதன் பின்னணியில் நடப்பது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது மதுரை அருகே படப்பிடிப்பு நடந்து வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து முத்தையா இயக்கத்தில் நடிக்க இருந்த அந்த கையில் காயம்பட்ட ஹீரோ யார் என்பதை ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.