close
Choose your channels

திருமணம் செய்ய மறுத்த டிவி ஆங்கரை கடத்திய பெண் தொழிலதிபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

Saturday, February 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சியில் பணிபுரியும் ஆங்கரை பெண் தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்வதற்காக கடத்தியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் சமூக வலைதளங்களில் டிவி ஆங்கரின் புகைப்படத்தை பார்த்து அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் பெண் தொழில் அதிபர் டிவி ஆங்கருக்கு லவ் டார்ச்சர் கொடுத்த நிலையில் பெண் தொழில் அதிபரின் மொபைல் போனை டிவி ஆங்கர் பிளாக் செய்து விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து டிவி ஆங்கரின் காரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்திய பெண் தொழிலதிபர், அவர் எங்கே செல்கிறார் என்பதை கண்டுபிடித்து அடியாட்களை வைத்து கடத்தியுள்ளார். அதன் பிறகு அடியாட்களை வைத்து அடித்து உதைத்து திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்ததாக தெரிகிறது.

பெண் தொழிலதிபரின் டார்ச்சர் தாங்க முடியாமல் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்த அந்த ஆங்கர் அதன் பிறகு அவரிடம் இருந்து தப்பித்த பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இது குறித்து விசாரித்த போது டிவி ஆங்கரை அந்த பெண் தொழிலதிபர் கடத்தி கொடுமைப்படுத்தியது உண்மைதான் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அவருடைய அடியாட்கள் நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் செய்ய ஆசைப்பட்டு ஆங்கரை ஒரு பெண் தொழிலதிபர் கடத்திய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.