close
Choose your channels

கிளிசரின் போடாமல் நடிகையை அழ வைத்த இயக்குனர்

Monday, August 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ராம் இயக்கிய 'தரமணி' திரைப்படம் பரவலாக பாராட்டப்பட்டிருப்பதோடு வசூல் ரீதிலும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் தயாரிப்பாளர் சதீஷின் மனைவியாக நடிகை லிசி ஆண்டனி நடித்துள்ளார். ஏற்கனவே ராம் இயக்கிய 'தங்கமீன்கள்' படத்தில் ஸ்டெல்லா மிஸ் என்ற கேரக்டரில் நடித்த லிசி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியின் மனைவியாக இருந்தும் புறக்கணிப்பு தனிமை .அவமதிப்பு , கண்டுகொள்ளாமை , வெறுமை ,சந்தேகப்பார்வை என்று பல வலிகளைத் தன்னுள் தாங்கும் ஒரு கனமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறிய லிசி, ' இயக்குனர் ராம் அனைவரையும் இயல்பாக நடிக்க வைப்பார். இந்த படத்தில் நான் அழுகிற காட்சிகளில் கூட கிளிசரின் இல்லாமல் என்னை நிஜமாகவே அழ வைத்து நடிப்பை வாங்கினார்.

மேலும் தனக்கு யார் போலவும் நடிக்க ஆசை இல்லை என்றும், நான் நானாக மட்டுமே இருக்க ஆசை என்று கூறிய லிசி, ஒரு காட்சியில் வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிய வைக்கும் கேரக்டரில் தொடர்ந்து நடிக்க ஆசை என்று கூறினார்.

லிசி தற்போது ராமின் அடுத்த படமான 'பேரன்பு ', 'சூ மந்திரக்காளி' , மாரி செல்வராஜ் இயக்கத்தில் ' பரியேறும் பெருமாள் ', 'மூடர் கூடம்' ஒளிப்பதிவாளர் டோனி இயக்கும் படம் என பிசியாக உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.