மறைந்த தாமிராவின் படத்தை தொடரும் பிரபல இயக்குனர்!

  • IndiaGlitz, [Saturday,December 25 2021]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்த இயக்குனர் தாமிரா படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா இணைந்து நடித்த ’ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் தாமிரா என்பதும் அவர் கடந்த சில மாதங்களாக ’தி ஃபெர்ஃபக்ட் ஹஸ்பண்ட்’ என்ற தொடரை இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே

சத்யராஜ் மற்றும் சீதா நடித்த இந்த தொடரின் படப்பிடிப்பு 80% முடிவடைந்த நிலையில் திடீரென கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இயக்குனர் தாமிரா காலமானார். இந்த நிலையில் ’தி ஃபெர்ஃபக்ட் ஹஸ்பண்ட்’ என்ற தொடரை தற்போது ’சலீம்’ படத்தின் இயக்குனர் நிர்மல் குமார் என்பவர் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் நிர்மல் குமார் இயக்கியுள்ள ’சதுரங்க வேட்டை 2’ படமும் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது ’தி ஃபெர்ஃபக்ட் ஹஸ்பண்ட்’ தொடரையும் அவர் முடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சாத்தானின் விதியை மாத்தி எழுதும் சாமானியன்: விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டீசர்

விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நயனுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடும் விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

நீங்கள் யூஸ் பண்ணின வார்த்தையின் பின்விளைவுகள் கடுமையா இருக்கும்: கமலின் எச்சரிக்கை யாருக்கு?

நீங்கள் யூஸ் பண்ணின வார்த்தையின் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரை கமல்ஹாசன் எச்சரித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வடிவேலுவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பா? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

புத்தாண்டில் அஜித், விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சிறப்பு விருந்து!

2022 ஆம் ஆண்டின் புத்தாண்டு இன்னும் ஒரு வாரத்தில் வரவிருக்கும் நிலையில் அந்த தினத்தில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இரு தரப்பு ரசிகர்களுக்கும் சிறப்பான விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.