close
Choose your channels

நீங்கள் யூஸ் பண்ணின வார்த்தையின் பின்விளைவுகள் கடுமையா இருக்கும்: கமலின் எச்சரிக்கை யாருக்கு?

Saturday, December 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீங்கள் யூஸ் பண்ணின வார்த்தையின் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரை கமல்ஹாசன் எச்சரித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் மழைக்காலம் முடிந்துவிட்டது என்றும், வெயில் காலம் ஆரம்பித்து விட்டது போட்டியாளர்களை கன்ஃபக்சன் அறைக்கு அழைத்து விசாரிப்போம் எனவும் கமல்ஹாசன் கூறியதில் இருந்தே அவர் காட்டமாக சில கேள்விகளைக் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் இன்றைய இரண்டாம் புரமோவில், ‘நிரூப் பிரியங்கா நீங்கள் இருவரும் ரோப் டாஸ்க்கில் நன்றாக விளையாடினீர்கள். ஆனால் ஏன் திடீரென விட்டீர்கள் என நிரூப்பிடம் கேட்க, அதற்கு நிரூப், ‘நிரூப் கேப்டனாக வேண்டாம், இவன் நல்ல கேப்டனாக இருக்க மாட்டான் என்று ப்ரியங்கா கூறியதால் நான் கோபத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்’ என்று கூறினார்.

அப்போது கமல்ஹாசன், ‘பிரியங்கா அது என்ன உங்க யுக்தியா’ என கேட்க அதற்கு பிரியங்கா, ‘பக்கத்தில் பெண்கள் உட்கார்ந்து இருப்பதால்தான் என்னால் ஒன்றும் பண்ண முடியவில்லை என்று அவன் சொல்லிக்கொண்டே இருந்தான்’ என்று கூறினார். இதனை அடுத்து கமல்ஹாசன், ‘நீங்கள் யூஸ் பண்ணின வார்த்தைகளான டெவில், செல்பிஷ், ஆகியவற்றின் பின் விளைவு கடுமையாக இருக்கும்’ என்று கூற, நிரூப்பின் முகம் அதிர்ச்சியில் உறைந்ததை பார்க்க முடிகிறது. மொத்தத்தில் இன்று பிரியங்கா மற்றும் நிரூப் ஆகிய இருவருக்கும் சரமாரியான கேள்விகள் காத்திருக்கின்றது என்று இன்றைய புரோமோவில் இருந்து தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.