close
Choose your channels

மறைந்த தாமிராவின் படத்தை தொடரும் பிரபல இயக்குனர்!

Saturday, December 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்த இயக்குனர் தாமிரா படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா இணைந்து நடித்த ’ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் தாமிரா என்பதும் அவர் கடந்த சில மாதங்களாக ’தி ஃபெர்ஃபக்ட் ஹஸ்பண்ட்’ என்ற தொடரை இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே

சத்யராஜ் மற்றும் சீதா நடித்த இந்த தொடரின் படப்பிடிப்பு 80% முடிவடைந்த நிலையில் திடீரென கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இயக்குனர் தாமிரா காலமானார். இந்த நிலையில் ’தி ஃபெர்ஃபக்ட் ஹஸ்பண்ட்’ என்ற தொடரை தற்போது ’சலீம்’ படத்தின் இயக்குனர் நிர்மல் குமார் என்பவர் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் நிர்மல் குமார் இயக்கியுள்ள ’சதுரங்க வேட்டை 2’ படமும் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது ’தி ஃபெர்ஃபக்ட் ஹஸ்பண்ட்’ தொடரையும் அவர் முடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.