close
Choose your channels

நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து கூறிய நடிகைக்கு நேர்ந்த சிக்கல்!

Sunday, June 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின்னர் இந்தியாவின் பெண் நிதியமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவருடைய டுவிட்டர் கணக்கு தற்போது திடீரென மாயமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை தனது டுவிட்டர் மூலம் கர்நாடக மாநில மக்களிடையே பெரிய அளவில்கொண்டு சேர்த்த, அவரது டுவிட்டர் பக்கம் தற்போது “கணக்கு தற்போது இல்லை” என்று காண்பித்து வருகிறது.

இதனிடையே காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் அடைந்த தோல்வி அடைந்ததால் அக்கட்சியின் சமூக ஊடகப்பிரிவிலிருந்து நடிகை திவ்யா விலகி விட்டடதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை திவ்யா மறுத்துள்ளார்.

நடிகை திவ்யாவே தனது டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்டாரா? அல்லது டுவிட்டர் இணையதளம் அவருடைய கணக்கை தடை செய்ததா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து கூறிய இரண்டாவது நாளே அவரது டுவிட்டர் கணக்கு நீக்கப்பட்டதால் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.