நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கு. திமுகவுக்கு ஏமாற்றம்

  • IndiaGlitz, [Wednesday,February 22 2017]

கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் திமுகவின் சார்பில் மு.க.ஸ்டாலின் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த மனுவை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த திமுகவுக்கு இது ஏமாற்றத்தை அளித்ததாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் வரும் 27ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

More News

தமிழக பொறுக்கிகளை டார்கெட் செய்யும் ஐ.எஸ் தீவிரவாதிகள். மீண்டும் சு.சுவாமியின் சர்ச்சை

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை பொறுக்கி என்று கூறுவது உள்பட அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இன்று மீண்டும் தனது சமூக வலைத்தளத்தில் தமிழர்கள் குறித்த சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்...

இயக்குனராக மாறும் பிரபல இசையமைப்பாளர்

விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறி ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். அதேபோல் நடிகரான சிம்பு இசையமைப்பாளராக மாறியுள்ளார். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இயக்குனராக மாறியுள்ளார்...

கமல் ஒரு படிப்பறிவில்லாத முட்டாள். டுவிட்டரில் தொடரும் கமல்-சுவாமி போர்

ஜல்லிக்கட்டு போராடம் தொடங்கியது முதல் கமல்ஹாசனுக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையே டுவிட்டர் போர் தொடங்கி அந்த போர் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளால் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது...

சூர்யா-செல்வராகவன் படத்தின் நாயகி குறித்த முக்கிய தகவல்

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கி முடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடியும் நிலையில் உள்ளது...

விவசாயி கேரக்டரில் நடிக்கும் பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் அமீர், தனது அடுத்தபடமான 'சந்தனத்தேவன்' படத்தின் ஆரம்பகட்ட பணியில் பிசியாக உள்ளார். இந்நிலையில் தனது உதவியாளர் கோபால் இயக்குனராக அறிமுகமாக உள்ள 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்...