close
Choose your channels

விவசாயி கேரக்டரில் நடிக்கும் பிரபல இயக்குனர்

Wednesday, February 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் அமீர், தனது அடுத்தபடமான 'சந்தனத்தேவன்' படத்தின் ஆரம்பகட்ட பணியில் பிசியாக உள்ளார். இந்நிலையில் தனது உதவியாளர் கோபால் இயக்குனராக அறிமுகமாக உள்ள 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த படத்தின் கதை திருப்பூர் மற்றும் கோவை பகுதியில் உள்ள ஒரு முக்கிய பிரச்சனையை மையமாக கொண்டது என்றும் இந்த படத்தில் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே வரும் விவசாயி கேரக்டரில் அமீர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தை இயக்குனர் கோபால் அவர்களே தயாரித்து வந்தார். தற்போது 75% இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தயாரிப்பு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டதாக அமீர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் டைட்டிலுக்காக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் மகள் புஷ்பா கந்தசாமியுடன் பேசி அனுமதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்த்தார். இதே பெயரில் கே.பாலசந்தர் இயக்கிய படம் ஒன்று கடந்த 1984ஆம் ஆண்டு அரசியல் படம் ஒன்று வெளிவந்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்யா, அவருடைய சகோதரர் சத்யா உள்பட பலர் நடிக்கும் 'சந்தனத்தேவன்' திரைப்படத்திற்காக மூன்று நாயகிகளை தேடி வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் இந்த படம் வரும் 2018ஆம் ஆண்டு பொங்கலில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் அமீர் மேலும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.