close
Choose your channels

சூர்யா-செல்வராகவன் படத்தின் நாயகி குறித்த முக்கிய தகவல்

Wednesday, February 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கி முடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் விரைவில் செல்வராகவன், சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பதையும், இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மிக விரைவில் படக்குழுவினர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.