close
Choose your channels

அமெரிக்க அதிபர் டரம்ப் கொரோனாவில் இருந்து தன்னை எப்படி காத்துக் கொள்கிறார் தெரியுமா???

Wednesday, May 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்க அதிபர் டரம்ப் கொரோனாவில் இருந்து தன்னை எப்படி காத்துக் கொள்கிறார் தெரியுமா???

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போதும், பொது வெளியில் தோன்றும் போதும் மாஸ்க் போன்ற எந்த பாதுகாப்பு கருவிகளையும் பயன்படுத்துவது இல்லை. அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் பல முறை எச்சரித்தும் அதை தவிர்த்தே வருகிறார். அதோடு “மருத்துவர்கள் மாஸ்க் அணிந்தால் கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறார்கள். ஆனால் நான் அதை அணிய மாட்டேன்” என்ற மக்களிடமும் பேசியிருந்தார். இந்நிலையில் தனது தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என்ன என்பதைப் பற்றி அதிபர் ட்ரம்ப் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம். “எனக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என அறியும் பொருட்டு ஒரு நாளைக்கு இருமுறை கொரோனா பரிசோதனை செய்கிறார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. அதிபராக இருப்பதால் அவ்வப்போது பரிசோதனை நடத்துகின்றனர். எல்லா பரிசோதனையிலும் நெகட்டிவ் என்றே முடிவு வருகிறது. எனக்கு கொரோனா வைரஸ் தொடர்பான எந்த அறிகுறியும் இல்லை. எனினும், நான் மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைச் சில வாரங்களாகச் சாப்பிட்டு வருகிறேன். அத்துடன் ஸிங்க் சல்பேட் மாத்திரையையும் எடுத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும், இந்த மாத்திரைகளைப் பற்றி தான் அதிக தகவல்களை தெரிந்து வைத்திருப்பதாகவும் பலரும் இந்த மாத்திரைகளை சாப்பிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதாக அதிபர் தெரிவித்தார். சில வாரங்களாக இந்த மருந்துகளை நான் தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன். ஒரு கட்டத்தில் இதை நிறுத்திவிடுவேன் எனவும் அதிபர் குறிப்பிட்டு இருக்கிறார். முன்னதாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் நல்ல பலனைத் தருவதாகவும் கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்து நல்ல பலனைக் கொடுப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் பேசியிருந்தார். அதையடுத்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

மேலும், நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இந்த மருந்தை குறித்து தனக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளே இந்த மருந்தை கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தாக ஏற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவின் தீவிர பாதிப்பு நிலையில் மட்டுமே இந்த மருந்து பயன்படுத்தப் பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.