close
Choose your channels

கேம் செயலி மூலம் நூதன மோசடி: கோடிக்கணக்கில் பணத்தை கைப்பற்றிய அமலாகத்துறை!

Sunday, September 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேம் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து ரூ.17 கோடி பணத்தை கைப்பற்றியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

இ-நட்ஜஸ் என்ற பெயர் கொண்ட கேம் செயலியில் பணம் கட்டி புதிர் விளையாட்டு விளையாடினால், அந்த விளையாட்டில் வெற்றி பெறும் பட்சத்தில் கூடுதல் பணம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதனை நம்பி ஏராளமானோர் பணம் கட்டி அதில் பணம் சம்பாதித்தனர்.

ஆனால் வெற்றி பெற்ற நபர்களுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அந்த மெசேஜில் நீங்கள் வெற்றி பெற்ற பணத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு சில நாட்களில் இரு மடங்கு பணம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பிய பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததையடுத்து பணத்தை திரும்ப பெற முடியாமல் இருப்பதை அறிந்து கொண்டனர்.

இதன் மூலம் மோசடி நடந்துள்ளதாக காவல்துறைக்கு புகார் வந்ததையடுத்து இந்த புகார் அமலாக்கத் துறைக்கு சென்றது. இந்த நிலையில் இ-நட்ஜஸ் என்ற கேம் செயலியை உருவாக்கியது கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அகமது கான் என்பவரின் மகன் அமீர் கான் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அமீர் கான் வீட்டில் அதிரடியாக அமலாக்கத் துறையினர் சோதனை செய்ததில் 17 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அமீர் கான் மற்றும் அவரது தந்தை அகமதுகான் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.