டைனோசர் 2 கால்களுடன் இறகுகூட வைத்திருக்குமா??? புதுவகை உயிரினத்தின் படிமம்!!!

  • IndiaGlitz, [Thursday,December 17 2020]

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டின் பழங்கால நீர்நிலை ஒன்றில் இருந்து ஒரு சிறிய வகை டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த டைனோசரின் படிமத்திற்கு வெறுமனே 2 கால்கள் மட்டும்தான் இருக்கிறது. அதோடு கோழிகளுக்கு இருக்கும் முடிகளைப் போன்று தனித்துவமான, கடினமான இறகுகளும் இருக்கின்றன. இதைப் பார்த்தால் இப்படி ஒரு விசித்திர டைனோசரை இதற்குமுன் பார்த்திருக்க முடியாது என்றே விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

காரணம் கிட்டத்தட்ட 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரும்பாலான டைனோசர்களுக்கு இறகுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி இருந்த இறகுகள் தனித்துவமான வகையில் பறவைகளை போலவே காட்சி அளித்ததாம். ஆனால் தற்போது வடகிழக்கு பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் டைனோசர் உருவத்தில் கோழி மாதிரியே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த டைனேசார் வெறுமனே இரண்டு கால்களுடன் நீளமான, தடிமனான ரிப்பன் (புரேட்டோஃபெதர்ஸ்) போன்ற முடியை வைத்திருக்கிறது.

110 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த டைனோசர் உருவத்தில் சிறியதாக இருப்பதோடு சிறிய முதுகெலும்புகளைக் கொண்ட பூச்சி, தவளை, பல்லி போன்ற விலங்குகளை வேட்டையாடி உயிர் வாழ்ந்து இருக்கலாம் என்றும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. ஜுராசிக் வகைகளில் சிறிய இனமான இந்த டைனோசரை உபிராஜாரா ஜுபாடஸ் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்து அழைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா காலத்தைப் பயன்படுத்தி… சமையலில் உலகச் சாதனை படைத்த சென்னை சிறுமி!!!

கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அர்ச்சனாவுக்கு அனிதா ஆதரவு, பாலாவுக்கு ரியோ ஆதரவு: மாறுகிறதா கூட்டணி!

பிக்பாஸ் வீட்டில் கடந்த பல வாரங்களாக அர்ச்சனாவின் அன்பு குரூப் டாமினேட் செய்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்த டாஸ்க்கில்

திருமணமான சிலமணி நேரங்களில் மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள்: அதிர்ச்சி தகவல்!

திருமணமான சில மணி நேரங்களில் மணமகனை அவருடைய நண்பர்களே கத்தியால் குத்திய சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொலை செய்து மண்டையை பீரிசரில் சேமித்து வைத்த டிவிட்டர் கில்லர்!!! குலை நடுங்கும் சம்பவம்!!!

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஒரு வழக்கின் குற்றவாளிக்கு நேற்று மரணத் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்தும் அந்த குற்றவாளி மீது பலரும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் ரவுண்டு கட்டிக் கலக்கும் விராட் கோலி-அனுஷ்கா ஜோடி!!! காரணம் இதுதான்…

விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஜோடி தற்போது படு சந்தோஷத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது