close
Choose your channels

தீ விபத்தில் இருந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றிய 5 வயது சிறுவன்

Friday, February 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜார்ஜியா நாட்டில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்த 5 வயது சிறுவன் அந்த வீட்டில் உள்ள எட்டு பேர்களை புத்திசாலித்தனமாக காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியா நாட்டில் பார்டோவ் கண்ட்ரி என்ற இடத்தில் ஒரு வீட்டில் மொத்தம் ஒன்பது பேர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று திடீரென நள்ளிரவில் அந்த வீட்டில் தீ விபத்து நேர்ந்தது. இதனால் ஏற்பட்ட புகையினால் திடீரென கண்விழித்த 5 வயது சிறுவன் உடனடியாக எந்தவித பதட்டமும் பயமும் இன்றி தனது இரண்டு வயது தங்கையை ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறிந்தான்.

அதன் பின்னர் பக்கத்து அறையில் உள்ள தனது மாமா மற்றும் அத்தை இடம் தீ விபத்து குறித்து கூறினான். உடனடியாக அவர்கள் இருவரும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களை எழுப்பி வீட்டை விட்டு வெளியேறி உதவி செய்தனர்.

5 வயது சிறுவனின் சமயோசித புத்திசாலித்தனத்தால் அந்த வீட்டில் உள்ள 9 நபர்களும் எந்தவிதமான தீக்காயமும் இன்றி காப்பாற்றப்பட்டார்கள். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அந்த சிறுவனைப் பாராட்டி வருகின்றனர். தன்னையும் தனது குடும்பத்தில் உள்ள 8 பேர்களையும் தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய ஐந்து வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.