கர்நாடக அரசியல் கட்சியின் மூத்த தலைவர் கொரோனாவுக்கு பலி!!! அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,September 03 2020]

 

கர்நாடக மாநிலத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாஜி கவுடா கொரோனாவால் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு வயது 67 என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தின் மூத்த தலைவர் கொரோனாவால் உயிரிழந்து இருப்பதும் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகச் செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா உட்பட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது முதல்வர் எடியூரப்பா நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் சிவமோகா மாவட்டம் பத்ராவதி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான அப்பாஜி கவுடா கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்து உள்ளார். அவர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தகவல்கள் கூறப்படுகிறது. நேற்று திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

More News

செல்போன் இல்லாததால் உயிரிழந்த கல்லூரி மாணவி! உடன்கட்டை ஏறினாரா காதலர்?

ஆன்லைன் படிப்புக்காக செல்போன் இல்லாததால் உளுந்தூர்பேட்டை மாணவி ஒருவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது தெரிந்ததே

ரயில்வே ஊழியரை கட்டி வைத்து உதைத்த தமிழ் நடிகர்? காவல் நிலையத்தில் புகார்!

ரயில்வே ஊழியர் ஒருவரை தமிழ் நடிகர் ஒருவர் கட்டி வைத்து நாள் முழுவதும் அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

விஜய் அழைப்புக்காக காத்திருக்கின்றேன்: இயக்குனர் வெற்றிமாறன்

கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் வெற்றிமாறன்.

தமிழகத்தில் இவ்வளவு தற்கொலையா? 4 நிமிடத்தில் ஒரு உயிர் பிரிவதாக பகீர் தகவல்!!!

இந்திய அளவில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் 2 ஆவது இடத்தைப் பிடித்து இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

அகதியாக தஞ்சம் அடைந்தவருக்கு ஹெலிகாப்டரில் பிரசவம்!!! பரபரப்பு தகவல்!!!

இத்தாலிக்கு அகதியாக வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பல்லாயிரக் கணக்கான அடி உயரத்தில் பறந்த ஹெலிகாப்டரில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது