பழனி முருகனுக்கு காவடி தூக்கி காயத்ரி ரகுராம்: வெயிட்டான வேண்டுதலா?

  • IndiaGlitz, [Wednesday,October 14 2020]

கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இருக்கும் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அக்கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளர் பதவி மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து பாஜகவில் பெரிய பதவி வேண்டி அவர் பழனி முருகனுக்கு காவடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பழனியில் காவடி தூக்கி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் தற்போது பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் பழனியில் காவடி தூக்கியுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் சந்தித்த அவர் ’தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் குஷ்புவை அடுத்து இன்னும் சிலர் பாஜகவில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த குஷ்புவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அனேகமாக அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று கட்சியில் சேர்ந்த குஷ்புவுக்கு எம்பி அல்லது எம்.எல்.ஏ பதவி கிடைக்கவிருக்கும் நிலையில் பழனி முருகனுக்கு காவடி தூக்கியதன் பயனாக காயத்ரி ரகுராமுக்கும் வெயிட்டான பதவி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டே தனுஷூக்கு நன்றி சொன்ன ஷிவானி: வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னால் நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் விதவிதமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் என்பது தெரிந்ததே

இத்தனை கொண்டாட்டங்களுக்கு நடுவில் சமூக இடைவெளி தாக்குப் பிடிக்குமா??? பதற வைக்கும் புகைப்படங்கள்!!!

இந்தியாவில் இந்த மாதம் அக்டோபர் முதல் வரும் டிசம்பர் வரை தசரா, தீபாவளி, துர்கா பூசை, நவராத்திரி, கிறிஸ்துமஸ் எனக் கொண்டாட்டங்களுக்கு

விஷால்-சிம்பு இயக்குனரின் அடுத்த படத்தில் வரலட்சுமி!

விஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த 'காளை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தருண்கோபி இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் 'யானை'. இந்த படத்தில் விஜய்சேதுபதி தயாரித்த

இறந்ததாகக் கூறி உயிரோடிருந்த அண்ணனை, தம்பியே ஃப்ரீசர் பெட்டியில் அஞ்சலிக்காக வைத்த சம்பவம்!!!

சேலம் பகுதியில் உயிரிழந்ததாகக் கூறி முதியவரை அவரது தம்பியே ஃப்ரீசர் பெட்டியில் அஞ்சலிக்காக வைத்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹத்ராஸில் அடுத்த கொடூரம்… 4 வயது குழந்தையை உறவினரே சீரழித்த சம்பவம்!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த மாதம் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டார்.