close
Choose your channels

விஷால்-சிம்பு இயக்குனரின் அடுத்த படத்தில் வரலட்சுமி!

Wednesday, October 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த ’காளை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தருண்கோபி இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் ’யானை’. இந்த படத்தில் விஜய்சேதுபதி தயாரித்த ’மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தில் நாயகனாக நடித்த அந்தோணி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

இந்த படம் குடும்ப சென்டிமென்ட் படம் என்றாலும் இதில் ஆக்சன் காட்சிகளும் இருக்கும் என்றும், பெண்கள் யானை போன்ற வலிமை உடையவர்கள் என்றும் ’யானை பலம் தெரியுமா மோதினால் என்ன ஆகும்’ என்பதை தெரிவிக்கும் கதையம்சம் கொண்டது தான் இந்த படம் என்றும் இயக்குனர் தருண்கோபி தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணத்துக்குப்பின் புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதை சமாளிக்கும் விதம் தான் இந்த படத்தின் கதை என்றும் இயக்குனர் தருண்கோபி கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 26ம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாகவும் அதன் பின்னர் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் கூறிய தருண்கோபி, இந்த படத்தில் இசையமைக்க இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் மாரிமுத்து, இளவரசு உள்பட 41 குணசித்திர நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.