15 வயதில் கர்ப்பமான சிறுமி… பயத்தில் Youtube பார்த்து குழந்தையைப் பெற்றெடுத்த அவலம்!

  • IndiaGlitz, [Tuesday,March 07 2023]

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமி ஒருவர் தனது தாய்க்கு பயந்து யூடியூப் பார்த்து குழந்தையைப் பெற்றெடுத்து அதைக் கொலையும் செய்த அவலம் அரங்கேறியிருக்கிறது.

நாக்பூர் அடுத்த அம்பாசாரி எனும் பகுதியில் வசித்துவந்த சிறுமி ஒருவர், உடல்நிலை சரியில்லை என்று கூறி, தான் கர்ப்பமான விஷயத்தையே பெற்ற தாயிடம் இருந்து மறைத்துள்ளார். மேலும் பல்வேறு யூடியூப் வீடியோக்களைப் பார்த்து எப்படி பிரசவம் பார்ப்பது எனவும் கற்றுகொண்டுள்ளார். இதன்மூலம் ஒரு பெண் குழந்தையையும் தனது தாய்க்குத் தெரியாமலே பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் குழந்தை அழுதால் அக்கம் பக்கத்தினருக்குத் தெரிந்துவிடும் என்பதால் பிறந்த குழந்தையை பெல்ட்டின் மூலம் கழுத்தை நெரித்துக் கொலையும் செய்துள்ளார்.

இதையடுத்து குழந்தையின் சடலத்தைத் தனது தாயிடம் இருந்து மறைப்பதற்காக பெட்டியில் வைத்து அதை மாடியில் வைத்துள்ளார். வெளியே சென்றிருந்த சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்ததும் சிறுமியின் உடல்நிலை குறித்து விசாரித்தபோது அவர் நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பெற்ற தாய்க்கு தெரியாமல் யூடியூப் பார்த்து குழந்தை பெற்றுக்கொண்ட சிறுமி குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுமி ஆன்லைன் மூலம் ஆண் ஒருவருடன் நட்பாகப் பழகி வந்தததையும் ஒருநாள் அந்த நபர் அவருடைய நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, மதுவைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தததையும் கண்டறிந்துள்ளனர். இதனால் கர்ப்பம் அடைந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையைத் தாயிடம் இருந்து மறைப்பதற்காக யூடியூப் பார்த்து தானே பிரசவம் செய்துகொண்டதையும் அதோடு அந்தக் குழந்தையை மறைப்பதற்காக கொலை செய்த அவலத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து பாலியல் குற்றங்களுக்கான பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்த நபரைத் தேடிவருவதாகக் கூறியுள்ளனர். மேலும் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தப் பின்னர் கொலை குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 15 வயதில் யூடியூப் பார்த்து தானே பிரவசம் பார்த்துக் கொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

More News

'ஈரம்' பட நாயகி சிந்து மேனனா இவர்? கணவர் குழந்தைகளுடன் க்யூட் புகைப்படங்கள்..!

 இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, நந்தா நடிப்பில் உருவான 'ஈரம்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சிந்து மேனனின் கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல்

இயக்குனர் நெல்சனுக்கு ஆச்சரிய பரிசு கொடுத்த 'ஜெயிலர்' நடிகர்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இயக்குனர் நெல்சனுக்கு பாலிவுட் நடிகர் அளித்த ஆச்சரியமான பரிசு குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல்

தனுஷ் உடன் இணையும் மாஸ் நடிகர்.. பிரமாண்ட படத்தின் இயக்குனர் இவரா?

கடந்த சில வருடங்களாக  தென்னிந்திய திரைப்படங்களில் இரண்டு மாஸ் நடிகர்கள் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாஸ் நடிகர்கள் நடிக்கும் படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன

ஜெயம் ரவி, ஆர்யா பட நாயகியா இவர்?  கணவர் குழந்தைகளுடன் உள்ள அழகிய புகைப்படங்கள்...!

 ஜெயம் ரவி, ஆர்யா படங்களில் நாயகி ஆக நடித்த நடிகை கணவர் மற்றும் குழந்தைகளுடன் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி.. கவர்ச்சி நடிகையின் சகோதரி கைது..!

வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கவர்ச்சி நடிகையின் சகோதரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.