close
Choose your channels

வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி.. கவர்ச்சி நடிகையின் சகோதரி கைது..!

Tuesday, March 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கவர்ச்சி நடிகையின் சகோதரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் உள்பட பல மொழி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் நடிகை அல்போன்சா. இவரது சகோதரி ஷோபா வசந்த் என்பவர் சென்னை வளசரவாக்கத்தில் வேலை வாங்கித் தரும் நிறுவனம் ஒன்றை நடத்தி லட்ச கணக்கில் பலரிடம் பணம் பெற்றதாக தெரிகிறது.

சிங்கப்பூர், கனடா உள்பட வெளிநாடுகளில் மாதம் மூன்று லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று விளம்பரம் செய்ததை அடுத்து பலர் அவரை நம்பி 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை பணம் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென அவர் வளசரவாக்கம் அலுவலகத்தை காலி செய்துவிட்டு நொளம்பூருக்கு மாற்றி உள்ளார். இதனை அடுத்து பணம் கொடுத்தவர்கள் நெளம்பூர் சென்று அங்கும் சோபாவிடம் வேலை என்னாச்சு என்று கேட்டுள்ளனர். மார்ச் மாதம் கண்டிப்பாக வேலை கிடைத்து விடும் என்று கூறிவந்த சோபா வசந்த் திடீரென மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.

இதனை அடுத்து காவல்துறையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுத்துள்ளதை அடுத்து சோபா மீது மோசடி தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் சோபா தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரிடம் லட்ச கணக்கில் பணம் கொடுத்தவர்கள் வரிசையாக புகார் அளித்து வரும் நிலையில் இவர் மோசடி செய்த தொகையின் மதிப்பு கோடி கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.