close
Choose your channels

ஜெயம் ரவி, ஆர்யா பட நாயகியா இவர்?  கணவர் குழந்தைகளுடன் உள்ள அழகிய புகைப்படங்கள்...!

Tuesday, March 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, ஆர்யா படங்களில் நாயகி ஆக நடித்த நடிகை கணவர் மற்றும் குழந்தைகளுடன் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் மற்றும் மலையாள நடிகை ரேணுகா மேனன் பரத் நடித்த ’பிப்ரவரி 14’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ஜெயம் ரவி நடித்த ’தாஸ்’ ஆர்யா நடித்த ’கலாபக் காதலன்’ உள்ளிட்ட படங்களிலும் ஒரு சில மலையாள தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் சுராஜ் என்பவரை ரேணுகா மேனன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பு தொழிலை நிறுத்திவிட்ட ரேணுகா மேனன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் நடன பள்ளி ஒன்று நடத்தி வருவதாகவும் இந்திய குழந்தைகளுக்கு நடனம் மற்றும் பாரம்பரியத்தை கற்றுக் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ரேணுகா மேனன் தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் ஒரு நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரேணுகா மேனனின் குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.