close
Choose your channels

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. கவர்னர் வித்யாசாகர் ராவ்

Friday, February 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார்? என்ற முடிவு தற்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் கையில் இருப்பதால் அவரது முடிவை எதிர்பார்த்து தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே காத்திருக்கின்றது.

இந்நிலையில் சசிகலா, ஓபிஎஸ், ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர்களை நேரில் சந்தித்த பின்னர் தற்போது ஆளுனர் அவர்கள் மூன்றுபக்க அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்பது முக்கிய குறிப்பாக உள்ளது. சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று முன்மொழிந்த முதல்வர் ஓபிஎஸ் அவர்களே தற்போது எதிரணியில் இருப்பதாலும், சசிகலா மீதுள்ள வழக்கின் தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது என்பதாலும் உடனடியாக சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ஒருசில குற்றச்சாட்டுக்களை சசிகலா மீது குறிப்பிட்டுள்ளார். கடந்த 5ஆம் தேதி நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நடந்ட்தவை, தற்போது எம்.எல்.ஏக்களின் நிலைமை, குதிரை பேரத்திற்கான வாய்ப்பு ஆகியவை ஓபிஎஸ் கூறிய குற்றச்சாட்டுக்கள். இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியது உள்ளதாகவும் எனவே தனக்கு இதுகுறித்து முடிவு எடுக்க இன்னும் கால அவகாசம் தேவை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.