close
Choose your channels

கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றி ஹீரோவான பாட்டி!

Friday, April 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னைக்கு அருகேயுள்ள பூந்தமல்லியில் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை அந்த குழந்தையின் பாட்டி தனது உயிரையும் மதிக்காமல் கிணற்றில் குதித்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியில் உள்ள கிருபாவதி என்பவரின் பேத்தி அரிபிரியா வீட்டின் முன் இருந்த கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராமல் கிணற்றில் அந்த குழந்தை தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருபாவதி உடனே சற்றும் யோசிக்காமல் கிணற்றுக்குள் குதித்தார். கிணற்றின் உள்ளே வெறும் ஐந்து அடியில் மட்டுமே தண்ணீர் இருந்ததால் குழந்தையை கிருபாவதி தூக்கி கையில் வைத்து கொண்டு பின்னர் தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்டு அங்கு கூடிய பொதுமக்கள் முதலில் புத்திசாலித்தனமாக குழந்தையை வாளியில் கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.

இருப்பினும் கிருபாவதிக்கு காலில் அடிபட்டிருந்ததால் அவரை மேலே கொண்டு வர பொதுமக்களால் முடியவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர் கிருபாவதியை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். தனது உயிரை துச்சமாக மதித்து பேத்தியின் உயிரை காப்பாற்றி ஹீரோவான கிருபாவதிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.