இது ஒரு பச்சைப்படுகொலை! ஜிவி பிரகாஷ் ஆவேசம்

  • IndiaGlitz, [Monday,October 29 2018]

சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த சாமிவேல்-சின்னப்பொண்ணு. தம்பதியின் 8 வயது மகள் ராஜலட்சுமி என்ற சிறுமியை அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை தன் தாயிடம் ராஜலட்சுமி கூறியதால் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், ராஜலட்சுமி தனியாக இருந்த நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்து ராஜலட்சுமியின் தலையை துண்டித்து கொலை செய்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தினேஷ்குமாரை அவரது மனைவியே போலீசில் பிடித்து கொடுத்தார். இது குறித்து ஆத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

இந்த நிலையில் ராஜலட்சுமியின் மரணம் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்கை ராஜலட்சுமியின் பாலியல் படுகொலை ஒவ்வொரு ஆணும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருங்கொடுமை. ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் கூட்டுச் சேர்ந்து நிகழ்த்திய பச்சைப்படுகொலை இது' என்று கூறியுள்ளார்.

More News

'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் நடிகை வரலட்சுமி அதிரடி கருத்து

கடந்த சில நாட்களாக 'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது.

கமல்-ரஜினி: நடுநிலையாளர்கள் ஓட்டு யாருக்கு? 

அதிமுக, திமுக இல்லாத ஒரு புதிய தலைமை வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான நடுநிலையாளர்கள் உள்ளதால் அவர்களுடைய ஓட்டுக்களை கவரும் வகையில் புதிய தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு பெரிய ஹீரோவின் தந்தை போன்றவர் என்னை படுக்கைக்கு அழைத்தார்! யாஷிகா ஆனந்த்

மீடூவில் பாலியல் குற்றச்சாட்டு கூறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவரும் நிலையில் சமீபத்தில் நடிகை யாஷிகா தனக்கும் பாலியல் தொல்லைகள் நடந்துள்ளதாக கூறி

பொண்ணை தானே ரூமுக்கு கூப்பிட்டாரு? இதில என்ன தப்பு: வைரமுத்து விவகாரம் குறித்து பிரபல நடிகர்

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி வைரமுத்து மீது இன்னும் ஒருசில பெண்களும் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.

தனுஷ்-லட்சுமிமேனன் ஜோடி சேருவது உண்மையா? இயக்குனர் விளக்கம்

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'மாரி 2' படங்களில் நடித்து முடித்துள்ளார்.