தனுஷின் 'அசுரன்' படத்தில் இணையும் பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,December 26 2018]

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் 'அசுரன்' என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் 'வெக்கை' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஒரு த்ரில் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் 'ஆடுகளம்', 'பொல்லாதவன்' படங்களுக்கு பின் தனுஷ் நடிக்கும் படம் ஒன்றுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் 'ஜெயில்' படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

யோகிபாபு எடுக்கும் 3வது அவதாரம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்து வரும் யோகிபாபு தற்போது ஹீரோவுக்கு இணையான முக்கிய வேடங்களில் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் சுசீந்திரன் என்னை ஏமாற்றிவிட்டார்: பிரபல நடிகர் குற்றச்சாட்டு

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடித்த படம் 'ஜீவா'.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடித்திருந்தார்

சூர்யாவின் அடுத்த பட டைட்டில் இந்த மூன்றில் ஒன்றுதான்!

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அவர் நடித்து வரும் படமான 'சூர்யா 37' படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார்

ஆளுங்கட்சி, எதிர்கட்சி அரசியல் நமக்குள் வேண்டாம்: பார்த்திபன்

சமீபத்தில் கூடிய தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டத்தில் துணை தலைவராக இருந்த கவுதம் மேனனுக்கு பதில் பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார்.

முதல் காதலியிடம் பணம் வாங்கி 2வது காதலிக்கு அபார்ஷன் செய்த இளைஞர்

மும்பையை சேர்ந்த 23வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய ஒரு காதலியிடம் பணம் பெற்று இன்னொரு காதலிக்கு அபார்ஷன் செலவு செய்தது தெரிய வந்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.