close
Choose your channels

சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்!

Tuesday, October 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களுக்கு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே. அதேபோல் சூர்யா நடித்துவரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படமும் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக ’வாடிவாசல்’ மற்றும் பாலா இயக்கத்தில் ஒருபடம் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வாடிவாசல்’ மற்றும் சூர்யா - பாலா இணையும் திரைப்படம் ஆகிய இரண்டிலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசை அமைத்து ’சூரரைப்போற்று’ படம் சமீபத்தில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் சூர்யாவின் அடுத்த இடத்தை இரண்டு படங்களுக்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.