close
Choose your channels

'நிலை மறந்தவன்' படத்தில் ஜோதிகா கேரக்டர் ஏன்?  எச் ராஜா விளக்கம்

Sunday, April 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’நிலை மறந்தவன்’ என்ற திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா கேரக்டர்கள் ஏன் என்பது குறித்து பாஜக பிரமுகர் ஹெச் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

பகத் பாசில் நடித்த ’டிரான்ஸ்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் தமிழாக்கப்படம் தான் ’நிலை மறந்தவன்’. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பாஜக பிரமுகர் எச்.ராஜா கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:

மதத்தை வியாபாரப் பொருளாக்கி அதை வீதிக்கு கொண்டு வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டும் தான் இந்த ’நிலை மறந்தவன்’ படம் என்றும் இந்த படம் கிறிஸ்துவ மதத்திற்கு எதிரானது அல்ல என்றும் மத வியாபாரிகளை வெளிச்சம் போட்டு காண்பிப்பது ஒன்று தான் இந்த படத்தின் நோக்கம் என்றும் மதத்தை வைத்து வியாபாரம் செய்பவர்களை இந்த படம் சுட்டிக் காண்பித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா கேரக்டர் ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் எப்படி அக்னி கலசம் காலண்டர் ஒரு குறியீடாக இருந்ததோ அதே போல் இந்த படத்தில் சூர்யா ஜோதிகா ஒரு குறியீடுதான் என்று அவர் பதில் கூறினார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் விஜய் நடித்த பீஸ்ட்’ படத்தை தான் பார்க்கவில்லை என்றும் அப்படியே பார்த்தாலும் அந்த படம் குறித்து பேசி புரமோஷன் செய்ய விரும்பவில்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.