அழகிரியின் பினாமி தான் அவர்....!ஜெயக்குமார் பிரச்சாரம் ...!


Send us your feedback to audioarticles@vaarta.com


ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரால் பத்தாயிரம் ஓட்டுகள் தான் பெறமுடியும் என அமைச்சர் ஜெயக்குமார் காரசாரமாக கூறியுள்ளார்.
சென்னை, ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக களமிறங்கும் அமைச்சர் ஜெயக்குமார், தொகுதியில் பல இடங்களுக்கு சென்று வாக்குகளை சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியிருப்பதாவது,
"சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக வெற்றிபெறும் என கூறியிருக்கிறது. ஆனால் அவை வெறும் திணிப்புகள் தான். கருத்துக்களை மாற்றி அதிமுக-வே வெற்றிபெறும். கடந்த தேர்தலின் போது கருத்துக்கணிப்பு கூறியதற்கு எதிர்ப்பாக தான் நடந்தது. இத்தொகுதியில் போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியால் பத்தாயிரம் ஓட்டுகள் கூட வாங்க முடியாது. இவர் அழகிரியின் பினாமியாக இருந்து வருகிறார். அதே போல் சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறியது, அவருடைய சொந்த கருத்து, நான் அதைப்பற்றி எதுவும் கூற முடியாது.
என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments