close
Choose your channels

சென்னை பெண்கள் விடுதியில் ரகசிய கேமிரா: உரிமையாளர் கைது

Friday, December 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் அந்த விடுதியின் உரிமையாளர் ரகசிய கேமிரா வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆதம்பாகக்த்தில் சம்பத்ராஜ் என்பவருக்கு சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று இயங்கி வந்தது. இதில் அலுவலகம் செல்லும், கல்லூரி செல்லும் பெண்கள் தங்கியிருந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் இந்த விடுதி திறக்கப்பட்டதாகவும், மாத வாடகையாக இங்கு தங்கியிருந்த பெண்கள் ரூ.5500 கொடுத்து கொண்டிருந்ததாகவும், தெரிகிறது.

இந்த விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண், ஹேர் டிரை செய்ய பிளக்கை சொருகும்போதுதான் அந்த பிளக்கின் உள்புறம் கேமிரா இருந்ததை தற்செயலாக கண்டுபிடித்ததாகவும், அதனையடுத்து அவர் போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது. இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த போலிசார் விடுதியை சோதனை செய்ததில் குளியலறை உள்பட பல இடங்களில் ரகசிய கேமிரா இருந்ததை கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட விடுதி உரிமையாளர் சம்பத்ராஜிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.