close
Choose your channels

ஹிப்ஹாப் தமிழா ஆதியை கயிற்றால் கட்டி வைத்த படக்குழு.. வைரல் வீடியோ..!

Saturday, February 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவை படக்குழுவினர் கயிற்றால் கட்டி வைத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் ஹிப்ஹாப் தமிழா. அவர் நடித்த ’மீசையை முறுக்கு’ ’நட்பே துணை’ ’நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது.

ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்து இசை அமைத்து பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தனி இசை ஆல்பங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த காதலர் தினத்தில் வெளியான ’பொய் பொய் பொய்’ என்ற இசை ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றது.

முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்ட இந்த இசை ஆல்பம் காதலித்து ஏமாற்றி சென்ற ஒரு பெண்ணினால் ஏற்படும் வலி துரோகம் ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் இந்த பாடலின் வரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலை படமாக்கும் போது எடுத்த வீடியோவை ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அப்போது அவரை படக்குழுவினர் கட்டி வைத்து படமாக்கும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.

’பொய் பொய் பொய் குழுவினர்களுடன் பணி புரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் இந்த ஆல்பம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது தனக்கும் தன்னுடைய குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.