ஒரே படத்தில் நான்கு முன்னணி நடிகைகள்

  • IndiaGlitz, [Friday,September 23 2016]

கடந்த 90கள் மற்றும் 2000-இல் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகிகளாக இருந்த நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, ராதிகா மற்றும் ஊர்வசி. இவர்கள் தற்போது அம்மா கேரக்டர் உள்பட ஒருசில கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில் விரைவில் ஒரு படத்தில் நால்வரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தை பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான ஜேம்ஸ் வசந்தன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'வானவில் வாழ்க்கை' என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே படத்தில் நான்கு நடிகைகள் இணைந்து நடிப்பதால் இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த மேலும் சில தகவல்களுடன் விரைவில் அறிவிப்பு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷின் 'பவர்பாண்டி'யில் ஹீரோவாகும் ரோபோசங்கர்

தனுஷ் முதன்முதலாக இயக்கும் 'பவர்பாண்டி' படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்திலும், பிரசன்னா மற்றும் சாயாசிங் ஆகியோர் பவர்புல் கேரக்டரிலும் நடித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்...

ஆண்டவன் கட்டளை- திரை விமர்சனம்

புத்திசாலியாக இருப்பது நல்லது மட்டுமல்ல, நல்லவனாக இருப்பது புத்திசாலித்தனம் ஆகும்- மகாத்மா காந்தி...

இளையதளபதி 'பைரவா'வின் ஒருசில ரகசியங்கள்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இதுவரை வெளிவராத ஒருசில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

'கபாலி'யுடன் கனெக்சன் ஆனது சூர்யாவின் 'S3'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பது அறிந்ததே...

'பைரவா' தமிழக ரிலீஸ் உரிமை. அதிகாரபூர்வ தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் திருநாளில்...