close
Choose your channels

மது போதைக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தளித்த கணவன்: மகளையும் சீண்டியதால் கைது!

Tuesday, June 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதுபோதைக்கு நண்பனை அடிமைப்படுத்தி நண்பனின் மனைவியை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த ஒருவர், நண்பனின் மகளையும் சில்மிஷம் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சியை சேர்ந்த தினேஷ் என்பவரும், ஃபாரூக் என்பவரும் கல்லூரி காலம் முதலே நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் இஸ்லாமிய பெண் ஒருவரை தினேஷ் காதலித்துள்ளார். இதனை அடுத்து தினேஷ்க்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் நண்பர் ஃபாரூக் திருமணம் செய்து வைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவ்வப்போது தினேஷ் வீட்டிற்குச் சென்று புனிதநீர் தெளித்து சடங்குகளையும் ஃபாரூக் செய்து வந்ததாக தெரிகிறது

ஆனால் ஃபாரூக் தெளித்த புனித நீரில் மயக்க மருந்து கலந்து நண்பரின் மனைவிக்கு கொடுத்து அவரை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் ஃபாரூக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஃபாரூக் செய்த வன்கொடுமையை கணவரிடமும் அவருடைய தங்கையிடமும் தினேஷ் மனைவி கூறியுள்ளார். ஆனால் நண்பன் கொடுத்த மதுவுக்கு அடிமையான தினேஷ், மனைவி கூறியதை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. தினேஷ் சகோதரியும் ஃபாரூக் கூறியபடி நடந்துகொள் என கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவந்த ஃபாரூக், தனது மகள் மீதும் சில்மிஷம் செய்ததைப் பார்த்து தினேஷ் மனைவி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து ஃபாரூக்கை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தினேஷின் சகோதரி மற்றும் ஃபாரூக் மனைவி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

போதைக்காக மனைவியை நண்பருக்கு விருந்தாக்கிய கணவர், அந்த நண்பர் அவருடைய மகள் மீதும் கை வைத்ததால் சிக்கிக் கொண்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.