close
Choose your channels

கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த 2வது மனைவி: ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்

Tuesday, June 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருச்சியை சேர்ந்த ஒருவர் இரண்டு ஊர்களில் இரண்டு மனைவிகள் வைத்து வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் இரண்டாவது மனைவி ஏற்பாடு செய்த கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சையை சேர்ந்த யூசுப் என்பவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் அவர்கள் திருச்சியில் வசித்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குவைத்துக்கு வேலைக்கு சென்ற யூசுப் அங்கு தன்னுடன் பணி செய்து கொண்டிருந்த அசிலா என்ற இலங்கைப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து தஞ்சாவூரில் ஒரு வீடு அமர்த்தி குடிவைத்தார். திருச்சி, தஞ்சை என இரண்டு மனைவிகளுடன் அவர் மாறி மாறி குடும்பம் நடத்தியதாக தெரிகிறது

இந்த நிலையில் தஞ்சையில் இருந்த இரண்டாவது மனைவி அசிலாவின் நடவடிக்கைகளில் சில மாறுதல் இருந்ததை யூசுப் கண்டுபிடித்தார். பேஸ்புக் மூலம் அவருக்கு பல இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அவர்களுடன் தகாத உறவு இருந்ததையும் கண்டுபிடித்தார்

இதனை அடுத்து அவர் கடந்த சில வருடங்களாக அசிலாவை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு யூசுப் மீண்டும் குவைத் சென்றிருந்த போது அவரது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் வங்கி மேலாளரை தனது வலையில் வீழ்த்தி அசிலா எடுத்து விட்டதாகவும் யூசுப்பின் வங்கி லாக்கரில் இருந்த கோடிக்கணக்கான நகைகள் மற்றும் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த தகவலை அறிந்ததும் உடனடியாக இந்தியா வந்த யூசுப், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கைகள் காரணமாக தனக்கு கிடைத்த கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிபோய் விடுமோ என்ற அச்சம் அசிலாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் பேஸ்புக்கில் அறிமுகமான நண்பர்களின் உதவியால் கூலிப்படையை வைத்து யூசுப்பை கொலை செய்துள்ளார்

இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இரண்டாவது மனைவி அசிலா தான் கூலிப்படையினர்களை ஏவி யூசுப்பை அடித்து கொலை செய்தார் என்பதை கண்டுபிடித்து அதன் பின் அவரை கைது செய்தனர். யூசூப்புக்கு தன்னை போலவே பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், தனக்கு பணம் கொடுத்து வந்ததை யூசுப் நிறுத்தியதால் அவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாகவும் அசிலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

மனைவிக்கு துரோகம் செய்து வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் காதலித்து திருமணம் செய்த யூசுப்பின் வாழ்க்கை சொற்ப ஆயுளில் முடிந்தது மட்டுமின்றி அவரது குடும்பம் இன்று தத்தளித்து வருகிறது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.