close
Choose your channels

கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி, முந்திக்கொண்டு மனைவியை கொலை செய்த கணவன்!

Wednesday, July 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவன் தூங்கும் போது தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டிய மனைவியை முந்திக்கொண்ட கணவர், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவர் முருகவள்ளி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்

இந்த நிலையில் இவர்களது குடும்பம் நிம்மதியாக சென்று கொண்டிருந்தபோது அக்கம்பக்கத்து பெண்களிடம் பழகிய முருகவள்ளிக்கு திடீரென குடி பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஓட்கா குடித்தால் அழகாக மாறலாம் என்று அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் கூறியதை அடுத்து அவர் ஓட்கா குடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் கணவன் வீட்டு செலவுக்கு கொடுக்கும் காசை எல்லாம் அவர் குடிப்பதிலேயே செலவு செய்து வந்தார்

இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வேலை இல்லாததால் வருமானம் இன்றி இருந்த சண்முகராஜ் தான் கொடுத்த பணத்திற்கு மனைவியிடம் கணக்கு கேட்க அவர் அனைத்தையும் குடிப்பழக்கத்தால் இழந்துவிட்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கியும் மனைவி குடித்திருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்த சண்முகராஜ் தனது மனைவியை கண்டித்துள்ளார்

இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி முருகவள்ளி தனக்கு தினமும் மது குடிக்க பணம் கொடுக்கவில்லை என்றால் தூங்கும்போது கல்லைப்போட்டு கணவரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகராஜ் தன்னை தனது மனைவி கொலை செய்வதற்கு முன் தானே மனைவியை கொல்ல முடிவு செய்து சம்பவத்தன்று மனைவிக்கு ஓட்கா வாங்கி கொடுத்துள்ளார். அதன்பின்னர் அவர் போதையில் இருந்தபோது அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு குழந்தைகளுடன் தலைமறைவானார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து தலைமறைவாக இருந்த சண்முகராஜை கைது செய்தனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் முருகவள்ளியின் உடலை அவரது அவரது பெற்றோர் உள்பட யாரும் வாங்க முன்வராததால் ஆதரவற்ற நிலையில் அவரது உடல் உள்ளது. மேலும் தந்தை கொலை செய்து ஜெயிலுக்குப் போய் விட்டதாலும், தாயார் கொலை செய்யப்பட்டு இறந்து விட்டதாலும் தற்போது அவர்களது இரண்டு குழந்தைகள் ஆதரவற்று தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.