மனைவியுடன் கள்ளக்காதல்: வாலிபரை உயிரோடு கொளுத்திய கணவரால் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,September 06 2020]

மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்த வாலிபரை அவரது கணவர் உயிரோடு தீ வைத்து கொளுத்திய சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என்ற பகுதியை அடுத்த தேவலாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் அபிராமிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் ராஜேஷின் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் திடீரென மணிகண்டன் ராஜேஷின் வீட்டுக்குள் சென்று பெட்ரோல் கேனை எடுத்து வந்து ராஜேஷின் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உடல் முழுதும் எரிந்து 90% தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய ராஜேஷை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த வாலிபரை உயிரோடு தீ வைத்து கொளுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

போதை மாத்திரை இல்லாத சினிமா விருந்தே இல்லை: விஷால் பட நடிகை அதிர்ச்சி தகவல் 

கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது தெரிந்ததே. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பற்ற வைத்த இந்த போதை பொருள் நெருப்பு

பிரான்ஸ் நாட்டின் ரியாலிட்டி ஷோவில் கலக்கிய 'சொப்பனசுந்தரி': டி.இமான் மகிழ்ச்சி

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்த பாடல் ஒன்று பிரான்ஸ் நாட்டின் ரியாலிட்டி ஷோவில் கலக்கிய வீடியோ தற்போது வைரல் ஆகியதை அடுத்து, டி.இமான் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் 

'சிங்கம்' பட பாணியில் போதை மருந்து சப்ளை: நடிகை ராகினி திவேதி அதிர்ச்சி வாக்குமூலம்

கடந்த சில நாட்களாக கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. இதுகுறித்து வழக்கில் நடிகை ராகிணி திவேதி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்

ஏ.ஆர்.ரஹ்மான், சச்சினை துணைக்கு அழைத்த விஜய் ரசிகர்கள்: மீண்டும் வைரலாகும் போஸ்டர்கள்

கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக எம்ஜிஆர் போன்று விஜய்யை உருவகப்படுத்திய போஸ்டர்கள்

சென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.3000 கோடியில் திட்டங்கள்!

சென்னையின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய உலக வங்கி உதவியுடன் ரூ.3000 கோடியில் திட்டங்களுக்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும்