இந்த இரண்டு மட்டும் தான் எனக்கு தெரியும்: நடிகர் செந்தில் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,May 06 2020]

பிரபல காமெடி நடிகர் செந்தில் நேற்று டுவிட்டரில் இணைந்ததாக செய்தி வெளியானது. இதனை செந்தில் ஒரு அறிக்கை மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் செந்தில் டுவிட்டரில் இணைந்தது மற்றும் அவர் வெளியிட்ட அறிக்கை ஆகியவை பொய் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகர் செந்தில் உறுதி செய்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது.

பத்திரிகை ஊடகம் மற்றும் டிவி ஊடகம் ஆகிய இரண்டு ஊடகங்கள் மட்டுமே எனக்கு தெரியும். மற்ற ஊடகங்கள் எனக்கு தெரியவே தெரியாது. ட்விட்டர், பேஸ்புக் இவை எதுவும் எனக்குத் தெரியாது. தவறான முறையில் யாரோ பரப்பி வருகின்றனர். இதை யாரும் தயவு செய்து நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தற்போது அதிகமாக இருப்பதால் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் கைகளை நன்றாக கழுவுங்கள். குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். யார் நல்ல அறிவுரை சொன்னாலும் கேட்டு கொள்ளுங்கள் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார். இந்த வீடியோவின் மூலம் நடிகர் செந்தில் டுவிட்டர் மட்டுமின்றி எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

More News

கொரோனாவுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை பலனளிக்குமா??? உலகநாடுகளில் நடந்துவரும் ஆய்வுகள் என்ன!!!

கொரோனா நோயைக் குணப்படுத்துவதற்கு இதுவரை முழுமையான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.

கொரோனா பரிசோதனையில் தெர்மல் ஸ்கேன் எப்படி பயன்படுகிறது???

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் முதலில் மனிதர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப் படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் மட்டுமல்லாது,

மாரடைப்பால் தந்தை மரணம்: கனிமொழி எம்பி உதவியால் 1200 கிமீ பயணம் செய்த சென்னை ஐடி இளம்பெண்

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் நிலையில் அவருடைய தந்தை மகாராஷ்டிர மாநிலத்தில் திடீரென காலமான நிலையில்

சானிடைசர் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

கொரோனா தடுப்புக்காக உலகம் முழுவதும் சானிடைசர் பயன்படுத்துவோரின் அளவு அதிகரித்து இருக்கிறது.

கொரோனா சிகிச்சை: உதவிக்கரம் நீட்டும் விப்ரோ ஐடி நிறுவனம்!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பாதிப்பு அதிகமாவதைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக பல தற்காலிக மருத்துவ மனைகளையும் உருவாக்கி வருகின்றனர்.