இந்த படத்தில் நான் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கின்றேன்: சன்னிலியோன்

  • IndiaGlitz, [Friday,July 06 2018]

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'கரண்ஜித் கவுர்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 'இந்த படத்தில் நான் நடிக்கவில்லை' என்றும் 'நானாக வாழ்ந்துள்ளேன்' என்றும் சன்னிலியோன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சன்னிலியோன் என்றால் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு அவர் ஒரு ஆபாச படங்களில் நடித்த நடிகை என்பதுதான் ஞாபகம் வரும். ஆனால் ஆபாச நடிகையாக இருந்தாலும் அவரது மென்மையான தாயுள்ளம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் சன்னி லியோன், வாடகைத்தாயின் மூலம் 2 ஆண் குழந்தைகளுக்கும் தாயாகியுள்ளார். மேலும் ஏராளமான சமூக சேவைகளையும் அவர் சத்தமில்லாமல் செய்து வருகிறார்.

எனவே சன்னிலியோனின் திரையுலக, ஆபாச படவுலக வாழ்க்கை மட்டுமின்றி அவருடைய இன்னொரு பக்கமும் இந்த படத்தின் மூலம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நோட்டீஸ் எதிரொலி: 'சர்கார்' படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 21ஆம் தேதி வெளிவந்தது. இந்த போஸ்டரில் விஜய் சிகரெட் புகைப்பது போன்ற போஸில் இருந்தார்.

பாரதிராஜா மகன் மீது திடீர் வழக்குப்பதிவு: காரணம் என்ன தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜா மீது தமிழக காவல்துறை பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. அவரும் ஒருசில வழக்குகளில் முன் ஜாமீன் பெற்று வழக்கை சந்தித்து வருகிறார்.

'சாமி 2' சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

அப்போதான் இவ பெரிசா வெடிக்க வைப்பா: வைஷ்ணவியை கலாய்த்த டேனி

பிக்பாஸ் வீட்டின் தலைவியாக வைஷ்ணவி கடந்த திங்கள் முதல் இருக்கின்றார். ஒரு தலைமைக்குரிய பண்பு சிறிதும் இல்லாத இவரை எப்படி தலைவராக ஏற்றுக்கொள்வது

பிரபுதேவாவுக்கு வில்லனாகும் 'பாகுபலி' பட நடிகர்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தில் காளகேயா மொழியில் பேசி கொடூரமான வில்லனாக நடித்திருந்தவர் பிரபாகர் என்ற நடிகர். இந்த படத்தில் இவருடைய தோற்றமும் இவர் பேசும் வசனமும் பயங்கரமாக இருக்கும்